Monday, March 7, 2011

யுத்தம் செய்

சேரனை ஹீரோவாக போட்டு ஒரு மர்ம படம் என்றதுமே படம் பார்க்கும் ஆவல் எற்பட்டுவிட்டது. மேலும் பட விளம்பரத்திற்கு  பாரதியாரின் “பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா”  என்ற வரிகளை பார்த்தவுடன் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் மேலும்...,.
பார்த்துவிட்டேன். தியேட்டரை விட்டு வெளியே வரும் போது திருப்தியாக (ரொம்ப நாட்களுக்கு பிறகு) வந்தேன்.
    அருமையான திரைகதை. ஒவ்வொரு காட்சியிலும் மர்மத்தை கூட்டிகொண்டே போய், பிறகு ஒவ்வொன்றாக அவிழ்ப்பது அருமையான நேர்த்தி.  படதொடக்கத்தில் ஒரு பெண் ஜன்னல் வழியாக பார்க்கும்  காட்சியை பிற்பாடு அதே  ஜன்னலை திறந்து பார்த்து விட்டு ஒரு மர்ம முடிச்சியை அவிழ்க்கும் விதமாக ஒரு உண்மையை சொல்லும் விதம் கை தட்டவைக்கும் யுக்தி.
            அதேபோல் சுஜாதா பாணியில் வில்லன் dr.பாஷ்யத்துக்கு போன் செய்து “உங்களுடன் படித்தவர்கள் வேறு யார் சென்னையில் இருக்கிறார்கள்” என்று கேட்டு விட்டு பதிலை சஸ்பென்ஸாக வைத்து ”ஆளை கண்டுபிடித்தாகி விட்டது. போகலாம்” என்று சொல்லிகிளம்புமிடம் சூப்பர்.
 நடிப்பில் சேரன், ஜெயபிரகாஷ் அருமை. அதைவிட இந்த படத்தில் வரும் துணை நடிகர்களின் நடிப்பு வெகு யதார்த்தம்.  கேரம் போர்டு  ரவுடி, குண்டு அம்மா, லாட்ஜ் பையன், ஆட்டோ டிரைவர்  சொல்லிகொண்டெ போகலாம். மிஷ்கின் அங்கு நிற்கிறார். கேமிரா வெகு அருமை. வித்தியசமான கோணங்கள். இசை சொல்லியே ஆகவேண்டும். புதுமையான முயற்சி.  பின்னால் மிஷ்கின்தான் தெரிகிறார்.
                     குறைகள் என்று சொன்னால் மர்ம முடிச்சிகளை அவிழ்பது இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். சில இடங்களில் புரியவில்லை.
                      பழைய ஆங்கில படங்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும்

சொன்னவிதமும், ஓங்கி ஒலிக்கும் சமூக அக்கறையும் நிச்சயம் பாராட்டுக்குரியது
திரையில் உங்கள் பயணம் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள் மிஷ்கின்

No comments:

Post a Comment