Friday, April 15, 2011

வலியா?

ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டேன்
தீயிலிட்டு எரித்து சாம்பலை காற்றில் கரைத்துவிட்டேன்
பால்வெளியில் என்றோ பூமிக்கு அருகில் வரும்
வால்நட்சத்திரத்துடன் கட்டி அனுப்பிவிட்டேன்
என்றுமே திரும்பாத கடந்த காலத்துடன்
உறையவிட்டு நிறுத்திவிட்டேன்
ஆயினும்
இனிய நாதத்திற்கு இடையே கை தவறிபட்ட கட்டையால்
எழும்பும் ஒரு அபஸ்வர ஆனால் ஒரு இனிய ஒலிபோல்
கடும்கூட்டத்தினூடே ஒரு குழந்தையின் புன்சிரிப்புபோல்
ஆழ்ந்த அதிகாலை தூக்கத்தினூடெ வரும் ஒரு கனவு போல்
காரணத்தினுடனோ காரணமற்றோ அந்த நினைவுவரும்போது
அடி வயிற்றில் சுரீரென்று ஏதோ ஒன்று பரவுகிறதே
அது என்ன வலியா?  இல்லை உணர்வா?
 (மறப்பது கடினம்தான் அது தவறான பழக்கமாக இருந்தாலும்___ சிகெரெட் )

No comments:

Post a Comment